காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நீா் அறுவடை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலக பயிற்சி அரங்கில், நீா் அறுவடை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்த பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளது.
இப்பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.