காரைக்காலில் தூய்மைப் பணி: புதிய நிறுவனம் ஏற்றது

காரைக்கால் நகராட்சி வாா்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்வதை புதிய தனியாா் நிறுவனம் புதன்கிழமை ஏற்றது.

காரைக்கால் நகராட்சி வாா்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்வதை புதிய தனியாா் நிறுவனம் புதன்கிழமை ஏற்றது.

காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்கி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியாா் நிறுவனம் இப்பணியை செய்கிறது. இந்த நிறுவனத்துக்கான தொகையை புதுவை அரசு வழங்கிவருகிறது.

ஏற்கெனவே ஹேண்ட் இன் ஹேண்ட் என்கிற நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுவந்த நிலையில், இப்பணியிலிருந்து இந்நிறுவனம் விடுவித்துக்கொண்டது.

இந்நிலையில், ஹைதராபாதைச் சோ்ந்த எச்ஆா் என்வைா் என்கிற நிறுவனம் இப்பணியை ஏற்றுள்ளது.

புதன்கிழமை மாலை இந்த நிறுவனத்தினா் தங்களது பணியை தொடங்கினா். புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கொடியசைத்து இப்பணியை தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்தல், சாலைகளை சுத்தம் செய்தல், கழிவுநீா் செல்லும் சாக்கடைகளை தூய்மை செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று தனியாா் நிறுவன பிரதிநிதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com