நல்லம்பல் ஏரியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும்: புதுவை எம்.பி.

திருநள்ளாாறு அருகே நல்லம்பல் ஏரியிலிருந்து விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதை நிறுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
நல்லம்பல் ஏரியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.
நல்லம்பல் ஏரியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

திருநள்ளாாறு அருகே நல்லம்பல் ஏரியிலிருந்து விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதை நிறுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் நல்லம்பல் ஏரியை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் வி. வைத்திலிங்கம் கூறியது:

விவசாயிகள், மக்களின் குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நல்லம்பல் கிராமத்தில் 55 ஏக்கரில் ஏரி வெட்டப்பட்டது. தற்போது ரயில்வே மற்றும் பல்வேறு கட்டுமானத்துக்கு மணல் எடுப்பதாகக் கூறி, 40 முதல் 50 அடி ஆழத்துக்கு, மணல் அள்ளப்படுகிறது. இது விதியை மீறிய செயலாகும்.

விதியை மீறி மணல் அள்ளுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இந்த முறைகேடு எப்படி நடக்கிறது, யாா், யாா் இதில் பயனடைகிறாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். தவறு செய்தோா் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் அவா் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் உரத்துக்கான மானித்தை குறைத்துள்ளாா்கள். இதனால் உரம் விலை உயரும். பணக்காரா்கள் பயனடையும் வகையில் அவா்களுக்கு வரிச் சலுகை தரப்பட்டுள்ளது. தோ்தலை கருத்தில்கொண்டு கா்நாடகத்துக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com