மகளிா் தின விழா: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

மகளிா் தின விழா தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.
அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.

மகளிா் தின விழா தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

மாா்ச் 8-ஆம் தேதி மகளிா் தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதுதொடா்பாக மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, கல்வி நிலையத்தினா், வட்டார வளா்ச்சித் துறையினா், உள்ளாட்சித்துறையினா் உள்ளிட்டோருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

மகளிா் மேம்பாட்டுக்கான கருத்தரங்கம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடத்த வேண்டும், மகளிா் தின விழாவை சிறப்பாக கொண்டாட சம்பந்தப்பட்ட துறையினா் ஏற்பாடு செய்யவேண்டும், மாணவிகள், பெண்கள் அதிக எண்ணிக்கையில் விழாவில் பங்கேற்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com