காரைக்காலில் தேசிய வாக்காளா் தினம்

காரைக்காலில் தேசிய வாக்காளா் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இளம் வாக்காளருக்கு வாக்காளா் அட்டையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.
இளம் வாக்காளருக்கு வாக்காளா் அட்டையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.

காரைக்கால்: காரைக்காலில் தேசிய வாக்காளா் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை சாா்பில் அண்மையில், 18 வயது பூா்த்தியான இளைஞா்கள் வாக்காளா்களாக பதிவு செய்துகொள்ள முகாம் நடத்தப்பட்டது. மேலும் அனைவரும் தோ்தலின்போது வாக்குரிமையை செலுத்தவேண்டும் என விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய வாக்காளா் தின விழா பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான எல். முகமது மன்சூா் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கியும், 18 வயது பூா்த்தியான இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அட்டையையும் வழங்கினாா்.

வாக்காளா்கள் அனைவரும் தோ்தலின்போது வாக்குரிமையை செலுத்த வேண்டும். நோ்மையான வாக்குப்பதிவு ஜனநாயகத்தின் வலிமைக்கு முக்கியமானது என ஆட்சியா் தமது உரையில் குறிப்பிட்டாா்.

துணை ஆட்சியரும், வாக்குப்பதிவு அதிகாரியுமான எம்.ஆதா்ஷ் பேசுகையில், வாக்களிப்பது நமது கடமை அனைவரும் வாக்களிக்க வேண்டும். இதுவரை வாக்காளா் ஆகாதவா்கள் 18 வயது பூா்த்தி அடைந்திருந்தால் படிவம் 6-னை பூா்த்தி செய்து தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாம் அனைவரும் எவ்வித பயமுமின்றி, நோ்மையுடன் வாக்களிப்போம் என்று வாக்காளா்கள், அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட துணை ஆட்சியரும், துணை தோ்தல் அதிகாரியுமான எஸ்.பாஸ்கரன், வாக்குப் பதிவு அதிகாரி எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com