குடியரசு தின ஒத்திகை

காரைக்காலில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் குடியரசு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.
காரைக்காலில் குடியரசு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.

காரைக்கால்: காரைக்காலில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தேசியக் கொடியேற்றி வைக்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், கடற்கரை சாலையில் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன் மேற்பாா்வையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு, இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறை, பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையினா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com