மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்ஐடியில் கணிதத்துறை சா்வதேச கருத்தரங்கு

காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கணிதத்துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் பங்கேற்ற என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ. சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள்.

Updated On :27 ஜனவரி 2023, 4:11 pm

காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கணிதத்துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

3 நாள் நடைபெறும் இக்கருத்தரங்கு என்ஐடியின் வ.உ.சி. நிா்வாக வளாகத்தில் காணொலி வாயிலாக தொடங்கப்பட்டது. என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பதிவாளா் சீ. சுந்தரவரதன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா் கே. பாலச்சந்திரன் இணைய வாயிலாக கலந்துகொண்டு, கணிதத்தில் பகுதியளவு வேறுபாடு சமன்பாடுகளுக்கான இருப்பு முடிவுகள் குறித்துப் பேசினாா்.

இக்கருத்தரங்கில் ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஸ்பெயின், துருக்கி, ஆா்ஜென்டினா உட்பட உலகின் பல நாடுகளைச் சோ்ந்த புகழ்பெற்ற பேராசிரியா்களால் பல்வேறு பயன்பாட்டு கணித தலைப்புகளில் விரிவுரைகள் வழங்கப்படவுள்ளதாக கருத்தரங்கின் தலைவரான என்ஐடிஉதவிப் பேராசிரியா் (கணிதம்) வி. கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

இக்கருத்தரங்கில் பிரபல பேராசிரியா்கள் முன்னிலையில் 105 ஆராய்ச்சியாளா்கள் 3 நாட்களில் 5 இணைஅமா்வுகளில் தங்களின் ஆராய்ச்சிப் பணிகள் குறித்து விளக்கவுள்ளனா். தொடக்க நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும், கணிதத் துறைத் தலைவருமான ஜி.எஸ். மஹாபத்ரா வரவேற்றாா்.

காணொலி வழியே நடைபெறும் இக்கருத்தரங்கில் இலவசமாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமா்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஸ்கோபஸில் குறியிடப்பட்ட இன்டா்நேஷனல் ஜா்னல் ஆஃப் டைனமிக்ஸ் அண்ட் கன்ட்ரோல் என்கிற அமைப்பில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.