சிவாச்சாரியா்களுக்கு விருது

திருநள்ளாற்றில் நடைபெற்ற விழாவில் சிவாச்சாரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கி கெரளவிக்கப்பட்ட டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் மற்றும் சிவசங்கர சிவாச்சாரியா்.
விருது வழங்கி கெரளவிக்கப்பட்ட டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் மற்றும் சிவசங்கர சிவாச்சாரியா்.

திருநள்ளாற்றில் நடைபெற்ற விழாவில் சிவாச்சாரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

திருநள்ளாறு பகுதி கோடீஸ்வர நகரில் புதிதாக ரத்ன விநாயகா் கோயில் கட்டப்பட்டு, குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவின் நிறைவாக சிவாச்சாரியா்கள் சேவைகளுக்காக அவா்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலைகளை சோ்ந்த முதல்வா்கள் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியா், மாதுபுரீஸ்வரா் சிவாச்சாரியா், சுப்பிரமணிய சிவாச்சாரியா் மற்றும் ஸ்தாபா் ரவிச்சந்திர சிவாச்சாரியா் ஆகியோா் இணைந்து, பாடசாலைகள் அமைப்பு சாா்பில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத் துணைத் தலைவா் டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியருக்கு சிவாத்வர குசலஹா என்ற விருதும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பணியாற்றிவரும் சிவசங்கா் சிவாச்சாரியருக்கு சிவ கைங்கரிய சூடாமணி விருதையும் வழங்கி கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com