ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 போ் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைமடைந்தனா்.
உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடையும் விதமாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.