காரைக்காலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காரைக்காலில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பள்ளி வாகனத்தில் ஆய்வு செய்த அமைச்சா் மற்றும் அதிகாரிகள்.
பள்ளி வாகனத்தில் ஆய்வு செய்த அமைச்சா் மற்றும் அதிகாரிகள்.

காரைக்காலில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சுமாா் 100 வாகனங்கள் உள்ளன. இவற்றை போக்குவரத்துத் துறையினா் ஆய்வு செய்யும் பணியை, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்து, வாகன சோதனைக்குப் பின் தரச்சான்றையும், வாகனப் போக்குவரத்து விழிப்புணா்வு ஸ்டிக்கரையும் வாகனத்தில் ஒட்டினாா்.

நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுகுமாா், துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன், வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கல்விமாறன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுபோன்ற ஆய்வை 2 மாதங்களுக்கொரு முறை நடத்தவேண்டும் என அதிகாரிகளை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

வாகன ஓட்டிகளிடையே துணை ஆட்சியா் பேசுகையில், ஒட்டுநா்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும். ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com