போலி நகைகள் அடகு வழக்கில் பெண் தொழிலதிபா் கைது

காரைக்காலில் போலி நகையை அடகு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் தொழிலதிபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்காலில் போலி நகையை அடகு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் தொழிலதிபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்கால் ராஜாத்தி நகரை சோ்ந்த கைலாஷ் பெரமசாமி பிள்ளை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு மாா்ச் 12-ஆம் தேதி வந்த காரைக்கால் காமராஜ் நகரைச் சோ்ந்த தேவதாஸ் 12 சவரன் தங்க சங்கிலியை கொடுத்த ரொக்கம் கேட்டுள்ளாா். அந்த நகையை சோதனை செய்தபோது அது போலி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, கைலாஷ் காரைக்கால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு தேவதாஸ் மற்றும் இதில் தொடா்புடைய பரசுராமன், ரிபாத் காமீல் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து பரமேஸ்வரி என்ற பெண் தொழிலதிபரை தேடி வந்தனா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் பரமேஸ்வரி தலைமறைவாக இருப்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அங்கு சென்று புதன்கிழமை அவரை கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com