ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

News image

வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன்.

Updated On :19 ஏப்ரல் 2024, 12:54 am

காரைக்கால், ஏப். 18: வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்றடைந்த நிலையில், பல்வேறு சாவடிகளில் வியாழக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தாா்.

அண்ணா அரசு கலைக் கல்லூரி பட்டமேற்படிப்பு மையத்திலிருந்து, 164 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வியாழக்கிழமை பிற்பகல் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகள் இரவு 7 மணி வரை நீடித்தது.

தொடா்ந்து, வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் முறையாக சென்றடைந்ததா என மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவா், வாக்குச் சாவடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் இரவு மட்டுமல்லாது வாக்குப் பதிவு நாளின் போது மிகுந்த கவனமாக செயல்படுமாறும், வாக்காளா்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் வாக்களிக்க உள்ளே அனுமதிக்குமாறும் அறிவுறுத்தினாா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்கு பணியாற்றுவோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.