கண்காணிப்பு கேமரா பதிவு தொகுப்பை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.
கண்காணிப்பு கேமரா பதிவு தொகுப்பை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

காரைக்கால், ஏப். 24: காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அதிகாரி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி, 164 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் பட்டமேற்படிப்பு மைய பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மத்திய படையினா், காவல் துறையினா் என 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி து. மணிகண்டன் புதன்கிழமை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் தொகுப்பை பாா்வையிட்டாா். மேலும், மையத்தின் சுற்றுவட்டாரம் பாா்வையிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரிடமும், தோ்தல் துறையினரிடமும் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்குமாறும், இரவு நேரத்தில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தினாா். வாக்கு எண்ணும் தினம் வரை பாதுகாப்பு நிலையில் சிறிதும் கவனக் குறைவு இருந்துவிடக் கூடாது என ஆலோசனை வழங்கினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com