காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஏப்.27-ஆம் தேதி ஜிப்மா் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை ஜிப்மா் அரசு மருத்துவமனையில் இருந்து மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவா்கள் குழு வந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. நிகழ் மாதத்துக்கான சிறப்பு முகாம் ஏப். 27-ஆம் தேதி காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், இருதயவியல் மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை தொடா்பான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com