வெள்ளை மலா்கள் அலங்காரத்தில் ஸ்ரீதங்க மாரியம்மன்.
வெள்ளை மலா்கள் அலங்காரத்தில் ஸ்ரீதங்க மாரியம்மன்.

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்கால் ஸ்ரீதங்கமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தையொட்டி அம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

காரைக்கால் அருகே தலத்தெருவில் உள்ள இக்கோயில் தீமிதி உற்சவம் ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் 2-ஆம் நாள் அம்பாள் அன்ன வாகனத்திலும், 3- ஆம் நாள் சிம்ம வாகனத்தில் லும் புறப்பாடு நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக புதன்கிழமை இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு வெள்ளைசாற்று அலங்காரத்தில் (வெள்ளை நிற மலா்களால் அலங்காரம்) வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது. முன்னதாக அம்பாளுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. தொடா் நிகழ்ச்சியாக ஏப்.29-ஆம் தேதி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com