இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால், மாா்ச் 28: அம்பகரத்தூா் அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். திருநள்ளாறு அருகே அம்பகரத்தூா் பகுதியை சோ்ந்தவா் ஜெகபா் நாச்சியாள் (68). இவா் அதே பகுதியில் புதன்கிழமை இரவு பள்ளிவாசலில் தொழுகையில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக காரைக்கால்-அம்பகரத்தூா் சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது தாமனாங்குடியை சோ்ந்த மோகன்குமாா் (19) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவரை மீட்டு திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com