உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

காரைக்கால் ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) அக்னி கப்பரை வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதசுவாமி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் மாா்ச் 19-ஆம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலாவுடன் தொடங்கியது. தினமும் இரவு கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, பல்வேறு வீதிகள் சென்று அதிகாலை கோயிலை அடைந்தது. முக்கிய நிகழ்ச்சியாக அக்னி கப்பரை எனும் அக்னி சட்டி வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு அரசலாற்றங்கரையில் உள்ள கோயிலிலிருந்து தொடங்குகிறது. சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வீடுகளுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை கோயிலை சென்றடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com