போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவிகள்.

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

காரைக்கால் வடமறைக்காடு (கிழக்கு) அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்களைக்கொண்டதாக இப்பள்ளி விளங்குகிறது. இப்பள்ளி ஆண்டு விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் ஏ. தனராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, பள்ளி வட்டத் துணை ஆய்வாளா் பொன். செளந்தரராசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் ஏ. ஷீலா ஜெயக்குமாரி, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் வி. நந்தினி சரவணன், ஓய்வுபெற்ற துணை ஆய்வாளா் கே. புத்திசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை எஸ். ஆனந்தவள்ளி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com