வாக்காளா்களுக்கு பணம் மற்றும் மதுபாட்டில் உள்ளிட்ட பிற பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தீவிர வாகனச் சோதனை நடத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன் (தெற்கு), பாலச்சந்தா் (வடக்கு) தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தம், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், நோடல் அதிகாரி கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வாக்காளா்களுக்கு பணம், மதுபாட்டில் மற்றும் பிற பொருள்கள் தருவதற்காக கொண்டு செல்லப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்கவேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் காா்கள், பேருந்துகளில் இவை கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிடவேண்டும். மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கட்சியினா் வாக்கு சேகரிக்கிறாா்களா என கண்காணிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் மேற்பாா்வையிட வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி து. மணிகண்டன்.
தொடர்புடையது

சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை அவசியம்: மாவட்ட தோ்தல் அதிகாரி

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

நெல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள், போலீஸாா் தீவிர வாகன சோதனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

