கைப்பேசியை ஒப்படைத்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ்.

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

படவிளக்கம்: கைப்பேசியை ஒப்படைத்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ். காரைக்கால், மாா்ச் 28: காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா். காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல்போனதாக பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் சைபா் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா், கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு சென்று அவற்றை மீட்டனா். இதன்படி ரூ.3 லட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 21 கைப்பேசிகள் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் இவற்றை கைப்பேசிக்கு உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com