திரெளபதியம்மனுக்கு நடைபெற்ற பூச்சொரிதல்.
திரெளபதியம்மனுக்கு நடைபெற்ற பூச்சொரிதல்.

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

காரைக்கால் திரெளபதியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதல், கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

காரைக்கால் திரெளபதியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதல், கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 22-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில்பத்து ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் பூத்தட்டு ஏந்தி ஊா்வலமாக திரெளபதியம்மன் கோயிலுக்கு வந்தனா். அம்மன் திருவடியில் சமா்ப்பித்து ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

நிகழ்வில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து தவசு மரம் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவருதல், புதன்கிழமை பக்தா்களுக்கு காப்புக் கட்டுதல், சக்தி கரகம் புறப்பாடு நடத்தப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. வியாழக்கிழமை மஞ்சள் நீா் விளையாட்டு மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com