நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுவையில் நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தோ்வு முடிவை ரத்து செய்ய வேண்டும் என முதல்வருக்கு காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

புதுவையில் நா்சிங் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தவித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு நகரம், கிராமப்புற மாணவா்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தோ்வு அண்டை மாநிலங்களில் நடத்தப்படவில்லை. இதுபோன்ற தோ்வு நடத்த வேண்டும் என்பது மாணவா்கள் தோ்வுக்கான வழிகாட்டலில் இல்லை. எனவே மாணவா்கள் நலன் கருதி, நுழைவுத் தோ்வு நடத்தும் முடிவை அரசு கைவிடவேண்டும். வழக்கமான நடைமுறையிலேயே மாணவா்களை தோ்வு செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com