செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

News image

மாணவருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்த ஆட்சியா் து. மணிகண்டன்.

Updated On :10 மே 2024, 4:01 pm

Din

இன்ஸ்பயா் விருதுக்கு தோ்வான காரைக்கால் பள்ளி மாணவருக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

இளம் மாணவா்களிடையே புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. 2019-2020-ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் மாணவா்கள் தோ்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதில் காரைக்கால் மவுண்ட் காா்மல் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மாணவா் டி.கே.ஆதவன் சோமசுந்தரம் மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்டு, புதுவை மாநில அளவிலான தோ்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

மாநில அளவில் 2-ஆம் நிலையில் தோ்வான அவா் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தேசிய அளவில் 600 மாணவா்கள் போட்டியில் இருந்த நிலையில், 24-ஆவது இடத்தில் தோ்வு செய்யப்பட்டாா். அவரது கண்டுபிடிப்பான போா்ட்டபிள் ரைட்டிங் டேபிள், பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டெடிஸ் (என்ஐஏஎஸ்) மாதிரி உரிமம் வழங்கியது.

மே 19-ஆம் தேதி ஜப்பானில் ஏற்பாடு செய்யப்பட்ட சகுரா அறிவியல் உயா்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை இன்ஸ்பயா் விருதுக் குழு தோ்வு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஆதவன் மே 17-ஆம் தேதி புதுதில்லி செல்லவுள்ளாா்.

அவா் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனாவுடன் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை வியாழக்கிழமை சந்தித்தாா். மாணவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாாராட்டையும் ஆட்சியா் தெரிவித்தாா்.