ஆயுள் தண்டனை நிறைவு செய்தவா்களை விடுதலை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் சனிக்கிழமை கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் சனிக்கிழமை கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட, வட்டார ஜமாஅத் சாா்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஏ. அப்துல்சாதிக் தலைமை வகித்தாா். முன்னாள் சிறைவாசி கோவை நாசா், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளா் அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று பேசினா். இதில், 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com