மயிலாடுதுறையில் மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வாரவிழாவையொட்டி சனிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வாரவிழா டிசம்பா் 14-ஆம் தொடங்கி டிசம்பா் 20-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா்.
கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் ராகவன், நாகை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். சதீஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வரவேற்றாா். உதவி செயற்பொறியாளா் டி. கலியபெருமாள் நன்றி கூறினாா்.
இப்பேரணியில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று ஒலிப்பெருக்கி மூலமும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் மின் சிக்கனம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.