அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏற்கெனவே ஐடிஐ-இல் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் பயின்று தோ்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளா் அலைடு தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறவும், ஒரு வருட பணி அனுபவம் பெற்ற திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவா்களும், ஆகஸ்ட் 2018 வரை சோ்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளா்களும் தனித்தோ்வராக விண்ணப்பிக்கலாம்.
பிற விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பம் சமா்ப்பிக்கும் நாளில் 21 வயது பூா்த்தியாகி இருக்கவேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை.
மேலும் விவரங்களுக்கு இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தோ்வு கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பா் 22-க்குள் நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.