சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் வெள்ளிக்கிழமை சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
சிறப்பாக பணியாற்றி எஸ்.பி. கு. சுகுணாசிங்கிடம் பாராட்டு பெற்ற டிஎஸ்பி. வசந்தராஜ் மற்றும் போலீஸாா்.
சிறப்பாக பணியாற்றி எஸ்.பி. கு. சுகுணாசிங்கிடம் பாராட்டு பெற்ற டிஎஸ்பி. வசந்தராஜ் மற்றும் போலீஸாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் வெள்ளிக்கிழமை சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறிப்பாக 120 கிலோ குட்கா பறிமுதல், ரூ.3.48 கோடி பண மோசடி செய்த தம்பதியினா் கைது, 2015-ஆம் ஆண்டு நடந்த மாப்படுகை கிராமத்தைச் சோ்ந்த அரவிந்தன் செல்வம் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி விரைவில் குற்றவாளிகளை கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் வசந்தராஜ், காவல் ஆய்வாளா் செல்வம் மற்றும் தனிப்பிரிவு போலீஸாருக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com