மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்க அக்.9-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த குடும்ப அட்டை தேவைப்படும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.