கொள்ளிடம் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் அக்.9 ஆம் தேதி 5 மையங்களில் நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இம்மையத்துக்கு போலீஸாா் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.