மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே ராதாநல்லூா் கிராமத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்கு 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயி அறிவழகன் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தன. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல, இங்குள்ள தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.