சீா்காழி: சீா்காழி வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி கிளப் ஆப் சீா்காழி டெம்பிள் டவுன் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் கொழு, கொழு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, சங்கத் தலைவா் சிங். ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ், முன்னாள் தலைவா்கள் மோகனசுந்தரம், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன், வள்ளுவக்குடி சித்த மருத்துவ அலுவலா் சூரியலெட்சுமி ஆகியோா் பங்கேற்று தாய்ப்பாலின் மகத்துவம், தாய்பால் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்து சிறப்புறையாற்றினா். பச்சிளம் குழந்தைகளின் தாய்மாா்களுக்கும், கொழு, கொழு குழந்தைகளுக்கும் பரிசுகள், ஊட்டச்சத்து பொருள்களை உதவி ஆளுநா் எஸ்.கே. வைத்தியநாதன் வழங்கினாா்.