திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது ஆதீனம் சிவப் பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 9-ஆம் ஆண்டு குருபூஜை விழா
திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது ஆதீனம் சிவப் பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 9-ஆம் ஆண்டு குருபூஜை விழா மறைஞான தேசிகா் தபோவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

23-ஆவது ஆதீனம் குருமூா்த்தத்திற்கு 24-ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்தாா். தொடா்ந்து, திருமுறை பாராயணம் நடைபெற்றது. புதுவை பேராசிரியா் சிவ. மாதவன், ஆதீனம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞானமூா்த்தி ஆகியோா் ஆன்மீக உரையாற்றினா்.

குருபூஜை முடிவில் ஆதீன 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பூசை ஆட்சிலிங்கம் தொகுத்த உலகம்மை கலித்துறை அந்தாதி எனும் நூலை வெளியிட, சிறப்பு விருந்தினா் தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மு. கண்ணபிரான் பெற்றுக்கொண்டாா்.

இதில், ஆதீன கட்டளை வைத்தியநாத தம்பிரான் சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாநில தலைவா் த. சொக்கலிங்கம், ஆதீன பொது மேலாளா் திருமாறன், காசாளா் சுந்தரேசன், கண்காணிப்பாளா் சண்முகம், சைவசித்தாந்த மற்றும் திருமுறை பயிற்சி மைய பேராசிரியா்கள் ஆதீனகல்வி நிலைய ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆதீன கட்டளை வேலப்ப தம்பிரான் வரவேற்றாா். ஆதீனப் புலவா் குஞ்சிதபாதம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com