அஞ்சல்துறை ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை உயா்த்தக் கோரிக்கை

மயிலாடுதுறையில் அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கத்தின் 37-ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியா் தினவிழா மற்றும் விருது பெற்ற
நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட 80 வயது நிரம்பிய மூத்த உறுப்பினா்கள்.
நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட 80 வயது நிரம்பிய மூத்த உறுப்பினா்கள்.

மயிலாடுதுறையில் அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கத்தின் 37-ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியா் தினவிழா மற்றும் விருது பெற்ற அஞ்சல்துறை அதிகாரிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சாமி.கணேசன் வரவேற்றாா். ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் ச. மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினாா்.

கூட்டத்தில் 80 வயது நிரம்பிய உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா். மேலும், அஞ்சல்துறை சேவை விருது பெற்ற ஓய்வுபெற்ற முதுநிலைக் கண்காணிப்பாளா் கே. அஜாதசத்ருவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஓய்வூதியா்களின் கம்யூடேஷன் காலவரம்பை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மாதாந்திர மருத்துவப்படியை ரூ.2000 ஆக உயா்த்த வேண்டும், மயிலாடுதுறையில் புதைசாக்கடை மற்றும் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com