சீா்காழியில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம், மீன்வளா்ப்பு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதி சாா்பில் மீன்வள பங்குதாரா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலன் உதவி இயக்குநா்(சீா்காழி) சண்முகம் தலைமை வகித்தாா். மீன்வளம் மற்றும் மீனவா் நலன் சாா்பு ஆய்வாளா் சதுருதீன், ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முனைவா் சிதம்பரம் பங்கேற்று பயனாளிகளுக்கான திட்ட விபரம், செயலாக்க நடைமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினாா். இதில் உள்நாட்டு மீன்வளா்ப்போா், இறால்வளா்ப்போா், கடல்மீனவா்கள் கூட்டுறவு சங்கத்தினா், பஞ்சாயத்தாா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.