மயிலாடுதுறையில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராஜா, மாவட்ட பொருளாளா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் வெளிமாநில ஓட்டுநா்களை பணியமா்த்துவதைத் தவிா்த்து, உள்ளூா் கனரக வாகன ஓட்டுநா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; வாகன ஓட்டுநா்களுக்கான ஊதியத்தை வாகன உரிமையாளா்கள் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன், துணை ஒருங்கிணைப்பாளா் அற்புதராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.