மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் வியாழக்கிழமை (செப்.25) குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை பூா்த்தி மற்றும் தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
மயிலாட்டுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரா் (வள்ளலாா்) கோயில் உள்ளது. குரு பரிகார ஸ்தலமான இக்கோயிலில் குருபெயா்ச்சியையொட்டி லட்சாா்ச்சனை நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை லட்சாா்ச்சனை பூா்த்தி விழா மற்றும் மேதா தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மேதா தட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் லட்சாா்ச்சனை பூா்த்தி விழாவும், புஷ்பாஞ்சலியும் நடைபெகிறது. தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு குருமகா சந்நிதானம் தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடை வெளியிட்டு அருளாசி வழங்குகிறாா்.