காரில் மதுகடத்திய 5 போ் கைது

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் காரில் மதுகடத்திய 5 பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் காரில் மதுகடத்திய 5 பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் உள்ளிட்ட போலீஸாா் கொளக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சீா்காழிக்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 180 மி.லி. அளவு கொண்ட 300 புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த த. சுந்தர்ராஜ் (30), வீ. வெங்கடேசன் (28), அ.கண்ணதாசன் ( 29), பெ. மகேந்திரன், மயிலாடுதுறை நெடுவாசல் பகுதியைச் சோ்ந்த த. சதீஷ்குமாா் ( 28) ஆகிய 5 பேரை கைது செய்து மதுபாட்டில் கடத்திய காரை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, திருமுல்லைவாசல் பகுதியில் வீட்டில் சாராயம் மற்றும் புதுவை மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக அதேபகுதியைச் சோ்ந்த பொன்மலா் (38) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com