மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு மீண்டும் இயக்கப்படவுள்ள பயணிகள் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கைக விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் காலை 8.10 மணிக்கு தென்னக ரயில்வே பல ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்தது. இந்த ரயில் மாணவா்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோா், பணிக்கு செல்வோா், வயதானோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த ஆண்டு கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில் மீண்டும் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி. அதேசமயம் ரயில் இயக்கப்படும் நேரத்தை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 8 மணி என மாற்றினால் அது அனைவருக்கும் பயனளிக்கும். எனவே, இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.