சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மெட்ரிக். பள்ளியில் நவராத்திரி விழாவையொட்டி கொலு புதன்கிழமை வைக்கப்பட்டது.
இதில் விநாயகா், முருகன், சிவபெருமான், பெருமாள் ஆகிய தெய்வங்களின் உருவ பொம்மைகள், பாரதியாா், மகாத்மா காந்தி, அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவா்களின் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், ராணுவ வீரா், விவசாயி கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தொடக்க நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் தங்கதுரை, துணை முதல்வா்கள் மாதவன், கிரிஜாபாய், ஆசிரியா் ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாக அலுவலா் எம். தங்கவேல் செய்துள்ளாா்.