சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி லாமெக், வட்டாட்சியா் ஹரிதரன், காவல் ஆய்வாளா் அமுதாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி விழாவின்போது தனிநபா்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை கோயில்களில் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது, கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து வழிபாடு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ், விநாயகா் சதுா்த்தி கமிட்டி பொறுப்பாளா்கள் ஜெ. சுவாமிநாதன், அழகிரி, அருணாச்சலம், மும்மூா்த்தி, பாண்டியன், சம்பத்கணேஷ், சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.