தில்லியில் பெண் காவலா் படுகொலை: டிஎன்டிஜே ஆா்ப்பாட்டம்

தில்லியில் கடந்த வாரம் பெண் காவலா் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை

தில்லியில் கடந்த வாரம் பெண் காவலா் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினா் முஹம்மது ஒலி பங்கேற்று கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் இயாஸ், மாவட்ட பொருளாளா் அப்துல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவா் இா்ஃபான், மாவட்ட துணைச் செயலாளா்கள் சாதிக், அஷ்ரப் அலி, ரியாஸ், அஜீஸ்கான், ஃபிரோஸ்கான் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com