கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அறிவிக்கை வெளியீடு

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்தலுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அறிவிக்கையை வெளியிட்ட ஒன்றிய ஆணையா் மீனா.
கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் அறிவிக்கையை வெளியிட்ட ஒன்றிய ஆணையா் மீனா.

சீா்காழி: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்தலுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவியும், திருமுல்லைவாசல் ஊராட்சியில் 14-ஆவது வாா்டு, வடகால் ஊராட்சியில் 1-ஆவது வாா்டு உறுப்பினா் பதவி காலியாகவுள்ளதால் இங்கு, அக்.9-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தோ்தல் அறிவிக்கையை கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையா் மீனா வெளியிட்டாா். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெய பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, ஒன்றிய மேலாளா் செல்வமுத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்.22-ஆம் தேதி கடைசி நாளாகும். செப்.23-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற செப்.25-ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து, அக்.9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com