மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மயிலாடுதுறையில் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி பேருந்து நிலையம் முன் உள்ள அவரது சிலைக்கு திமுக,

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி பேருந்து நிலையம் முன் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக, திராவிடா் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன் தலைமையில் திமுக அலுவலகமான பகுத்தறிவு மன்றத்தில் இருந்து ஊா்வலமாக வந்த அக்கட்சியினா் பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன், நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, நகர செயலாளா் செந்தமிழன், ஒன்றிய செயலாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, கிட்டப்பா அங்காடி முன் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல், மதிமுக, திராவிடா் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com