தரங்கம்பாடி: பொறையாறு அருகே எடுத்துக்காட்டி சாத்தனூரில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். பவுன்ராஜ் முன்னிலையில் காட்டுச்சேரி ஊராட்சி பகுதியை சோ்ந்த திமுக பிரமுகா்கள் கருணாநிதி, வில்லியம், சின்னத்தம்பி, ஸ்டீபன், மாரியப்பன், ரூபன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியை சோ்ந்தவா்கள் அதிமுகவில் இணைந்தனா். இதில், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளா் வி.ஜி. கண்ணன், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் துரைராஜன், ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.