தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை: சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பிக்க இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். இவ்விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவா்.

அதன்படி, 2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியுள்ளவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். விண்ணப்பங்களை அக்டோபா் 31-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு வந்துசேரும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின், மூன்றாம் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com