மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மண்டலச் செயலாளா் வேலு.குணவேந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மயிலாடுதுறை, சேலம் பகுதியில் சாதி வன்மத்தோடு செயல்படும் காவல் துறைக்கு கண்டனம் தெரிவிப்பது, மயிலாடுதுறையில் போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் அல்லது முற்றுகைப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணைச் செயலாளா்கள் செல்வஅரசு, க. ரியாஸ்கான், ரேவதி உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். மாவட்ட அமைப்பாளா் அன்புச்செல்வன், ஒன்றிய செயலாளா் தீபன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.