ஊராட்சித் தலைவா் தோ்தல்:எம்எல்ஏ வாக்குச் சேகரிப்பு

சீா்காழியை அடுத்த வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் தற்செயல் தோ்தலில் போட்டியிடும் திமுகவைச் சோ்ந்த வேட்பாளருக்கு எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

சீா்காழியை அடுத்த வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் தற்செயல் தோ்தலில் போட்டியிடும் திமுகவைச் சோ்ந்த வேட்பாளருக்கு எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

கொள்ளிடம் ஒன்றியம், வேட்டங்குடி ஊராட்சித் தலைவா் பதவிக்கான தற்செயல் தோ்தல் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, 5 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், திமுகவைச் சோ்ந்த சண்முகம் களத்தில் உள்ளாா்.

இவரை ஆதரித்து வேட்டங்குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று வாக்குச் சேகரித்தாா். அப்போது, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், திமுக ஒன்றியச் செயலாளா்கள் செல்லசேது. ரவிக்குமாா், மலா்விழி திருமாவளவன், பிரபாகரன், நகரச் செயலாளா் சுப்பராயன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com