கோட்டப்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைப் பணியாளா்கள் போராட்டம்

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களுக்கு அரசு உத்தரவிட்டும் சம்பளம் வழங்க மறுத்த சீா்காழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரைக் கண்டித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவா்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் கோட்டப் பொறியாளரைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் மா. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் ஆ. அம்சராஜ், மாநில செயலாளா் எஸ். கோதண்டபாணி மற்றும் அச்சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அலுவலக வாசலை முற்றுகையிட்டு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com