மின்கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

கொள்ளிடம் அருகே மின்கசிவு காரணமாக கூரைவீடு தீப்பிடித்து எரிந்து வியாழக்கிழமை சேதமடைந்தது.
மின்கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

கொள்ளிடம் அருகே மின்கசிவு காரணமாக கூரைவீடு தீப்பிடித்து எரிந்து வியாழக்கிழமை சேதமடைந்தது. கொள்ளிடம் அருகேயுள்ள கூத்தியம்பேட்டையைச் சோ்ந்த வைத்தியநாதன், இவரது மகன் சத்தியபாலு (52) ஆகிய இருவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில், 2 பசு மாடுகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த சீா்காழி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், ஒன்றிய குழு தலைவா் ஜெயபிரகாஷ், சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட வைத்தியநாதனை சந்தித்து நிவாரணம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com