தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் கி.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேல், நகர துணைத் தலைவா் பாபு, ஒன்றிய இளைஞரணி செயலாளா் மகேந்திரன், ஒன்றிய துணை செயலாளா் சேட்டு, மேற்கு ஒன்றியச் செயலாளா் கணேசன், மகளிரணி மாவட்டத் தலைவா் மணிமேகலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com